இயற்கையின் எழிலில் இறைவனைக்
காண்போம் (33)
இறைவன் படைத்த ஹெலிகாப்டர்கள்
மேலெழும்ப,
கீழிறங்க, முன்னே செல்ல, பின்னே செல்ல, ஒரே இடத்தில் பறந்திட என்று பல வேலைகளையும்
செய்திட மனிதன் படைத்தான் ஹெலிகாப்டர்களை இன்று.
என்றோ
படைத்திட்டான் ஹெலிகாப்டரை இறைவன்.
பறவைகளில்
தேன் சிட்டு, அமெரிக்காவின் ஹம்மிங் பேர்ட், பூச்சிகளில் தும்பி, தேனீ, பம்பிள் பீ
என்னும் கரி வண்டு இவை எல்லாமே ஹெலிகாப்டரைப் போல மேலெழும்பவோ, கீழிறங்கவோ, முன் செல்லவோ,
பின் செல்லவோ, பக்க வாட்டில் திரும்பவோ, ஒரே இடத்தில் பறக்கவோ முடிந்த உயிரினங்கள்.
தேன் சிட்டு
ஹம்மிங் பேர்ட்
தும்பி
தேனீ
கரி வண்டு (Bumble bee)
சில
தாவரங்களின் விதைகளும் காற்றில் பறந்து செல்லும் தன்மை உடையவை. ஆனால் அவை தானாகப் பறந்திடுவதில்லை. காற்று வீசிடும் திசையில் எல்லாம் அவையும் பறந்து
சென்று, பின் தரையை அடைந்து தக்க தருணம் வரும் போது புதிய செடியாக முளைத்திடும். உதாரணத்துக்கு இலவம் பஞ்சு, எருக்கு, கைரோகார்பஸ்
என்றழைக்கப் படும் மரம் இவற்றின் விதைகள் காற்றின் உதவி கொண்டு பறந்து செல்லும்..
எருக்கஞ்செடியின் விதை. காற்றில் பறந்து செல்லும் இதை தாத்தா பூச்சி என்போம்.
கைரொகர்புஸ் விதை
மரத்தில் இருந்து விழும்போது கைரொகார்பஸ்
விதை பறந்து செல்லும் அழகினைப் பார்க்க கீழுள்ள இணைப்பிற்குச் சென்று பார்க்கவும்..
இயற்கையில்
தான் எத்தனை வினோதங்கள்!
(கருப்பு
வெள்ளை படம் மட்டும் எடுத்து நடராஜன் கல்பட்டு.
மற்றவை இணைய தளங்களில் இருந்து)
நடராஜன்
கல்பட்டு
No comments:
Post a Comment