Sunday 30 June, 2013

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்  (31) சில வினோதப் பறவைகள் (1) மீன் பிடிக்க மறந்த மீன் கொத்தி : கூக்கபரா

பாடும் பறவைகள் சிலவற்றைப் பார்த்தோம். சிரிக்கும் பறவையைப் பார்க்க வேண்டாமா.

ஆஸ்திரேலியாவில் கூக்கபரா (Kookaburra) என்றொரு பறவை.  இது மீன் கொத்திகளின் இனத்தைச் சேர்ந்தது.  உடல் அளவில் மீன் கொத்திகளை விட சற்றே பெரியது.  வெள்ளை நிற உடலில் வெள்ளை புள்ளிகள் கொண்ட பழுப்பு நிற இறக்கைகள்  அல்லது நீலமும் கருப்பும் கலந்த் இறக்கையும் வாலும் கொண்டது. உச்சந்தலையிலும், வாயின் ஆரம்பத்தில் இருந்து கழுத்தின் பாதி தூரம் வரையிலும் கரும் பழுப்பு நிறப் பட்டைகள். வால் சிறகுகளில் குருக்கு வாட்டில் கரும் பழுப்பும் ஆரஞ்சுமாக மாறி மாறிப் பட்டைகள்.  மேல் அலகு கருநீலத்திலும் கீழ் அலகு மஞ்சள் கலந்த ரோஜா நிறத்திலும் இருக்கும்.


 

  


பார்ப்பதற்கு நம் நாட்டு மீன் கொத்தி போலவே இருக்கும் இந்தப் பறவைக்கு மீன் பிடிக்கத் தெரியாது.  ஆனால் எலிகள், பாம்பு, ஓணான் போன்றவற்றைப் பிடித்துத் தின்னும்.  ஆகவே விவசாயிகள் இந்தப் பறவையை தங்களுக்கு உபயோகமான ஒன்று என்ற எண்ணத்தில் மேற்கு ஆஸ்திரேலியாவிலும் டாஸ்மேனியாவிலும் கூட குடியேற்றி இருக்கிறார்கள்.

கூக்கபராவிற்குத் தெரிந்த ஒன்று கூட்டமாகக் கூடி வெடிச் சிரிப்பு
அலைகளை எழுப்புபது.  அவை சிரிக்கும்போது காடே அதிரும் என்று கூடச் சொல்லலாம்.



http://www.mareebaheritagecentre.com.au/images/kookaburra-large.jpg

தொடர் சிரிப்பினைக் கேட்க சுட்டியை அழுத்துங்கள் (Ctrl+click on link below) அல்லது சுட்டியினை காபி செய்து வலைத் தேடியில் பேஸ்ட் செய்து enter பட்டனை அழுத்தவும்.

(சிரிப்பின் நடுவே ஏப்பம் வேறா?)

இயற்கையின் எழில் வழியே இறைவன் நமக்களிக்கும் கண்கொளாக் காட்சிகளைக் கண்டு / கேட்டு ரசியுங்கள்.

                                            நடராஜன் கல்பட்டு


1 comment:

  1. Beauty!
    வேறெந்த வார்த்தையும் தோன்றவில்லை!

    ராம்

    ReplyDelete