Wednesday 2 January, 2013


 இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (15) கசாப்புக் காரன்

பறவைகளில் தையல் காரரைப் பார்த்தோம்.  நெசவாளரைப் பார்தோம்.  தச்சுவேலை செய்பவரைப் பார்த்தோம். கட்டிடத் தொழிலாளரைக் கூட பார்த்தோம்.  ஒரு கசாப்புக் கடைக் காரரையும் பார்க்க வேண்டாமா?

அசுரக் கிளி அல்லது கசாப்புக் காரன் என்று ஒரு குருவி.  இதன் ஆங்கிலப் பெயர் ஷ்ரைக் அல்லது புச்சர் பேர்ட் (Shrike or Butcher bird) என்பதாகும்.

இந்தப் பறவைக்கு ஏன் இந்த வினோதப் பெயர் தெரியுமா?  இது தனக்குக் கிடைக்கும் ஆகாரத்தை, அதாவது வெட்டுக்கிளி, ஓணான், சிறு பறவைகள் போன்றவற்றை, வேலமரம் போன்ற ஒரு மரத்தின் நீண்ட முட்களில் குத்தி வைத்துக் கொள்ளும்.  பின்னர் பசி எடுக்கும்போது நிதானமாக தான் சேகரித்து வைத்த மாமிசத்தை உட்கொள்ளும்.  வேறு ஏதேனும் ஒரு பறவயோ, விலங்கோ அந்த மரத்தினை நெருங்கினால் அவற்றைத் துரத்தித் துரத்தி விரட்டி அடிக்கும்.  அசுரக்கிளி தான் போங்க!

நம் கசாப்புக் காரர் வியாபாரத்துக்குக் கடை திறக்கவில்லை.  சொந்த உபயோகத்திற்காகத் தான் கடை திறந்திருக்கிறார் என்பது மற்றப் பறவைகளுக்குத் தெரியாது போலும் !

இந்தியாவில் சுமார் ஐந்தாறு வகையான கசாப்புக் காரக் குருவிகள் உள்ளன.  அவற்றில் தமிழ் நாட்டில் பே பேக்ட் ஷ்ரைக் என்பதையும், க்ரே ஷ்ரைக் என்பதையும் (Bay backed shrike and Grey shrike) நாட்டுப் புரங்களிலும், தரிசுக் காடுகளிலும் காணலாம்.  முட்கள் உள்ள மரம் அருகில் கட்டாயம் இருக்கவேண்டும்.  அடுத்த பக்கத்தில் பாருங்கள் சாம்பல் நிற கசாப்புக்க காரர் எப்படிக் கடை திறந்து வைத்திருக்கிறார் என்று.
                                                  
கசாப்புக் காரர் கடையில் ஒரு சுண்டெலி
(http://upload.wikimedia.org/wikipedia/commons/4/44/Lanius_excubitor_1_%28Marek_Szczepanek%29.jpg)

இவர் கடையில் ஒரு கோழிக் குஞ்சு
                                                                                                                     
செம்முதுகு கசாப்புக் காரன் (Bay backed Shrike (http://en.wikipedia.org/wiki/Image:Bay-backed_Shrike_(Lanius_vittatus) _at_Sultanpur_I_Picture_052.jpg)                                                  
                                                                            
இயற்கையின் எழிலில் நமக்கு இறைவன் காட்டும் விந்தைகள் தான் எத்தனை !


                                      நடராஜன் கல்பட்டு   


                                                                 

No comments:

Post a Comment